பழநி, அக். 16: பழநி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா, ஆனைமலையை சேர்ந்தவர் சுதா (52).
இவரது சகோதரி திருநெல்வேலியை சேர்ந்த சக்கரவர்த்தி மனைவி ஜெயலட்சுமி (55). சுதாவை பார்ப்பதற்காக ஜெயலட்சுமி தனது பக்கத்து வீட்டை சேர்ந்த சீராஜ்தீன் மனைவி பாரிஜானுடன் (48) ஆனைமலை சென்றிருந்தார்.நேற்று முன்தினம் சுதா தனது காரில் சகோதரி ஜெயலட்சுமி, இவரது தோழி பாரிஜான், வீட்டில் பணிபுரியும் சுப்புலட்சுமி (56) ஆகியோருடன் திண்டுக்கல் மாவட்டம், பழநிக்கு கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தனர். காரை ஆக்டிங் டிரைவர் ஆனைமலையை சேர்ந்த ஜெயபிரகாஷ் (40) ஓட்டி வந்தார்.