இப்ப விழுமோ... எப்ப விழுமோ..? முறிந்து விழும் நிலையில் சிக்னல் கம்பிகள்

திருப்பரங்குன்றம், அக்.15: திருநகரில் ஆபத்தான நிலையில் எந்த நேரத்தில் முறிந்து விழும் நிலையில் உள்ள சிக்னல் கம்பியை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருநகரில் உள்ள திருமங்கலம்-மதுரை சாலையில் பல இடங்களில் சிக்னல் விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த சிக்னல் விளக்குகள் அனைத்தும் சுமார் 20 அடி உயர இரும்பு கம்பிகளில் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த சிக்னலில் சில இடங்களில் விளக்குகள் எரிவதில்லை. இதில் திருநகர் இரண்டாவது ஸ்டாப் அருகில் உள்ள சிக்னல் கம்பியின் அடிப்பகுதி துருப்பிடித்து துளையுடன் ஆபத்தான நிலையில், எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. போக்குவரத்து மிகுந்த, ஆட்கள் நடமாட்டம் அதிகளவில உள்ள இந்த பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள சிக்னல் கம்பியை அசம்பாவிதம் ஏற்படும் முன் மாற்றியமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: