ஒட்டன்சத்திரம் கிருஷ்ணகவுண்டன் புதூரில் கழிவுநீர் செல்ல கால்வாயே இல்லை

திண்டுக்கல், அக். 15: ஒட்டன்சத்திரம் கிருஷ்ணன்கவுண்டன் புதூரில் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் குளம்போல் தேங்கி காய்ச்சல் பரவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒட்டன்சத்திரம் வட்டம், கிருஷ்ணகவுண்டன் புதூரை சேர்ந்த மக்கள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், ‘எங்களது ஊரில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்கி குளம்போல் தேங்கி நிற்கிறது. இதில் கொசுக்கள் பல்கி பெருகி டெங்கு போன்ற மர்மக்காய்ச்சல் பரவி வருகிறது. கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டிய இடங்களை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இவர்கள்தான் கால்வாய் கட்ட இடைஞ்சலாக உள்ளனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கால்வாய் கட்ட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

Related Stories: