காங்கயம், அக். 15: சிவன்மலை பகுதியில் டெங்கு காய்ச்சல் ஒழிப்புக்கு ஒத்துழைப்பு தராவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தொழிற்சாலைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது குறித்து காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர் மகுடேஸ்வரி, சிவன்மலை அடிவாரப்பகுதியில் உள்ள சிவன்மலை, சரவணா நகர் மற்றும் கணபதி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், தேங்காய் களங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் ஆலைகளுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ்சில் கூறியிருப்பதாவது: மாவட்ட கலெக்டரின் அறிவுரையின்படி சிவன்மலை ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்புகள், தேங்காய் களங்கள், அரிசி ஆலைகள், திருமண மண்டபங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைக்காக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நேரடி ஆய்வு மேற்கொண்டதில் டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளது.