நாங்குநேரி, அக். 15: நாங்குநேரி அருகே உள்ள தெற்கு நாங்குநேரி ஊராட்சி வீரான்குளம் கிராமத்தில் ஏராளமான அதிமுக கொடிகள் கட்டப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும்படை அலுவலர் கண்ணன் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று விசாரணைநடத்தினர். இதில் அனுமதியின்றி அதிமுக கொடிகள் கட்டியிருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக வீரான்குளம் பகுதி அதிமுகவினரிடம் விசாரணை நடத்தினர். இதில் தேர்தல் பணிக்காக வந்திருந்த நாமக்கல்லைச் சேர்ந்த சதீஷ் என்பவர்தான் கட்டியிருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பறக்கும்படை அலுவலர் கண்ணன், நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ சஜீவ் விசாரணை நடத்தி தேர்தல் விதிமுறை மீறியதாக சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்தார்.