திருக்கழுக்குன்றம், அக். 15: கல்பாக்கம் அருகே உர வியாபாரி வீட்டில் 12 சவரன் நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கல்பாக்கம் அடுத்த நெய்குப்பி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (32). இவர் அணுபுரம் பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து வீடு திரும்பினார். பின்னர், வீட்டுக் கதவை காற்றுக்காக திறந்து வைத்து, முருகன், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்குள் மர்ம நபர்கள் ஓடும் சத்தம் கேட்டு முருகனும், அவரது மனைவியும் திடுக்கிட்டு எழுந்தனர்.