ஓசூர், அக்.10: ஓசூர் நகராட்சி பகுதியில், தேங்கி கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு அபாயம் நிலவுகிறது. ஓசூர் நகராட்சிக்கு உட்பட்ட முக்கண்டபள்ளி எம்ஜிஆர் நகரில், நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அதிக தொழிற்சாலைகள் நிறைந்த இப்பகுதியில், நேற்று முன்தினம் ஆயுத பூஜை ெகாண்டாடபட்டது. பூஜை முடித்து அடுத்த நாள் பல்வேறு பகுதிகளில் இருந்து நகராட்சி பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டி கிடக்கிறது. அதில் பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட அழுகிய பொருட்கள் மலை போல் கொட்டப்பட்டுள்ளது.