பவானி, அக். 10:பவானி நகரில் மின்வாரிய ஊழியர்கள் பற்றாக்குறையால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பவானி நகரப்பகுதியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் சுமார் 14,000 குடியிருப்பு மற்றும் வர்த்தக மின் இணைப்புகள் உள்ளன. பவானி நகர மின்வாரிய அலுவலகத்துக்கு உட்பட்ட இந்த பகுதியில், மின்வாரிய ஊழியர் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் மின்பழுது ஏற்பட்டால் அதை சீரமைப்பதில் மிகவும் காலதாமதம் ஏற்படுகிறது. பவானி நகர மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேன் 6 பேரும், ஃபீல்ட் அசிஸ்டன்ட் 6 பேரும், லைன் இன்ஸ்பெக்டர் 2 பேரும், போர்மேன் 2 பேரும் என மொத்தம் 16 பேர் பணியாற்ற வேண்டும். ஆனால், கடந்த 6 மாதத்துக்கு மேலாக 6 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.