கடையம், அக். 10:ஆழ்வார்குறிச்சி அருகே செங்கானூர் ரயில்வே சுரங்க பாதையில் பெருக்கெடுத்த மழைநீர் நாட்கணக்கில் தேங்கிநிற்பதால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். ஆழ்வார்குறிச்சி அடுத்துள்ளது செங்கானூர். நெல்லை- செங்கோட்டை ரயில் வழித்தடத்தில் உள்ள இக்கிராமத்தில் இருந்த எல்சி 66 கேட்டுக்கு பதிலாக ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இங்கு தேங்கும் மழைநீரை வெளியேற்றும்பொருட்டு நிரந்தரமாக இதனருகே மோட்டார் செட் அமைத்து அதன்மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. ஆனால், கடந்த வாரம் பெய்த மழையால் இந்த சுரங்கப் பாதையில் பெருக்கெடுத்த தண்ணீர், நாட்கணக்கில் தேங்கிநிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் மிகவும் அவதிப்படுகின்றனர்.