ஆரணி, அக்.10: ஆரணி அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பள்ளி ஆசிரியையை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.ஆரணி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். ஆரணி அடுத்த ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜக்கிளி மகன் பிரபாகரன்(30). இவர் வேலூரில் உள்ள தனியார் பைக் ஷோருமில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில், பிரபாகரனும், ஆசிரியையும் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக பழகி வந்துள்ளனர். மேலும், திருமணம் செய்த கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஆசிரியையிடம் தனிமையில் இருந்ததால் அவர் கர்ப்பமானார்.