பாடாலூர் அருகே குடும்ப பிரச்னையால் பெண் தீக்குளிப்பு

பாடாலூர், அக். 9: பாடாலூர் அருகே குடும்ப பிரச்னை காரணமாக இளம்பெண் தீக்குளித்தார். ஆலத்தூர் தாலுகா கொளத்தூர் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராசு மனைவி மகாலட்சுமி ( 22). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. தம்பதிக்குள் குடும்ப பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மகாலட்சுமி தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: