கரூர், அக். 9: காவிரி நீரை நீர்நிலைககளில் நிரப்பி குடிநீர், விவசாயத்தை மேம்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. சக்திவேல் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் கந்தசாமி பேசினர். செயற்குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், ராஜூ, லக்குவன், ஜோதிபாசு, முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காவிரியாற்றில் வெள்ள காலங்களில் தண்ணீர் சேகரிக்க முடியாமல் உபரியாக லட்சக்கணக்கான அடி தண்ணீர் கடலில் வீணாக கலந்து விடுகிறது. இதனால் கோடைகாலங்கள், மழை பெய்யாத காலங்களில் வறண்ட மாவட்டமாக மாறி விடுகிறது. இதனால் விவசாயம் முற்றிலும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு கடவூர், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் பஞ்சப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் வானம் பார்த்த பூமியாக வறண்ட தரிசு நிலங்களாகவும் உள்ளது. கரூர் மாவட்டம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் சொல்லொணா துயரத்தை சந்தித்து வருகின்றனர்.