பழநி, அக்.9: பழநி நகராட்சி குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.9 லட்சம் மதிப்பிலான தரம்பிரிக்கும் இயந்திரம் எரிந்து நாசமானது. பழநி நகரில் 33 வார்டுகள் உள்ளன. சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் தண்டாயுதபாணி சுவாமி கோயில் இந்நகரில் உள்ளது. இதன் காரணமாக கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களாலும் அதிக அளவில் குப்பை சேகரமாகிறது. இங்கு சேகரமாகும் குப்பைகள் பெரியப்பா நகரில் உள்ள நகராட்சி குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகின்றன. இங்கு கொட்டப்படும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரித்தல், இயற்கை உரம் தயாரித்தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.