குன்னூர், அக். 9: குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் வீசிச்செல்லும் பிளாஸ்டிக் பொருட்களால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனத்தில் பயணிக்கும்போது தாங்கள் கொண்டு வரக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை வீசி செல்கின்றனர். மாவட்ட நிர்வாகம், வனத்துறை சார்பில் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சுற்றுலா பயணிகள் வன விலங்குகளுக்கு உணவளித்து வருகின்றனர்.