துறையூர், அக்.4: துறையூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியிலிருந்த பெண்மருத்துவரை பணி செய்ய விடாமல் தடுத்து தரக்குறைவாக பேசிய இருவர் மீதுநடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் செய்யப்பட்டது.
உப்பிலியபுரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் உதவி மருத்துவராக நித்யா பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம் 2 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலான சுகாதார நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது அங்கு மாலையில் புடலாத்தியை சேர்ந்த பாலகுமரன்(27) என்பவர் குடிபோதையில் வாய், நெற்றிப் பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற சென்றார்.