காங்கயம்,அக்.4: காங்கயம் நகராட்சிப் பகுதியில் திறந்தவெளிப் பகுதியில் சிதறிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் துவக்கி வைத்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், காங்கயம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, நகராட்சிப் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை மகளிர் சுய உதவிக்குழு மற்றும் நகராட்சி சுகாதாரப்பணியாளர்களுடன் இணைந்து அகஸ்திலிங்கம்பாளையம் பிரிவு சாலை முதல் திருப்பூர் சாலை ஹாஸ்டல் ஸ்டாப் வரை, இல்லியம் புதூர் சாலை மற்றும் சவுண்டாம்பிகை நகர் ஆகிய பகுதிகளில் திறந்தவெளிப் பகுதியில் சிதறிக்கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் பணி நடைபெற்றது. இதில் 300 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது.