திருப்புத்தூர், அக்.4: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பகுதியில் சோழம்பட்டி, திருக்களாப்பட்டி கே.வைரவன்பட்டியில் வயல்களில் விவசாயிகள் தொடர் மழையை நம்பி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றன. திருப்புத்தூர் பகுதி கிராமங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கண்மாயில் சிறிதளவே தண்ணீர் உள்ளது. இருப்பினும் மோட்டார் மூலம் கண்மாய் உள்ள நீரை வயல்களில் பாய்ச்சி கூடுதல் செலவுடன் விவசாயப் பணிகளை இப்பகுதி விவசாயிகள் செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் இப்பகுதி விவசாயிகள் கட்டடம், விறகு வெட்டுதல், ஹோட்டல் போன்ற கூலி வேலைக்கு சென்று வந்தனர். இந்த ஆண்டு கடந்த சில வாரங்களாக திருப்புத்தூர் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து பெய்துவரும் நல்ல மழையால் கண்மாயில் சிறிது தண்ணீர் இருக்கிறது.