கொடைக்கானல், அக்.4: கொடைக்கானலில் தொடர் மழையால் குடிநீர் தேக்கங்கள் நிரம்பி வருகின்றன. கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்து வருகிறது. கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் குடிநீர் தேக்க அணைகள் உள்ளன. இந்த இரண்டு அணைகளும் கடந்த மாதம் தண்ணீரின்றி வறண்டு வந்தது. குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக அணைகள் நிரம்பி வருகின்றன. இன்னும் சில தினங்கள் தொடர்ந்து மழை பெய்தால் இந்த இரண்டு அணிகளும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பும்.