கரூர், அக். 4: புஞ்சை காளக்குறிச்சி சிட்கோ தொழில்மனைகளுக்கு விண்ணப்பங்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா புஞ்சைகாளக்குறிச்சியில் ஒருங்கிணைந்த ஜவுளி, பின்னலாடை பூங்காவில் சிட்கோ நிறுவனத்தால் தொழில்மனைகளுக்கு முழுத்தொகை விற்பனை மற்றும் 30 ஆண்டுகால குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதற்காக ஜவுளி மற்றும் பின்னலாடை சார்ந்த குறு, சிறு, நடுத்தர தொழிற் நிறுவனங்களில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியாக உள்ள மனைகள் பற்றிய விபரம், அதன் தற்காலிக விலை, நிபந்தனைகள் மற்றும் அனைத்து விபர்ங்களை இணைய தளங்களில் காணலாம்.