புதுச்சேரி, அக். 2: புதுச்சேரி வழுதாவூர் சாலையில் ஜூஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உரிமையாளர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.புதுவை கதிர்காமம் நேரு வீதியில் வசிப்பவர் பழனிசாமி (38). இவர் வழுதாவூர் மெயின்ரோடு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி எதிரே ஜூஸ் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று காலை கடையை திறந்த பழனிசாமி அங்கு பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அவரது கடையில் இருந்த காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ குபீரென கடை முழுவதும் பரவிய நிலையில் அங்கிருந்த பழனிசாமி தீக்காயமடைந்தார்.