நண்பரை கத்தியால் வெட்டிய 5 பேர் அதிரடி கைது

வில்லியனூர், அக். 2:நண்பரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வில்லியனூர் அருகே உள்ள நடராஜன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட். சம்பவத்தன்று இவரது நண்பர்களான இதே பகுதியை சேர்ந்த மாருமணி, அய்யப்பன், சரண்ராஜ், அலெக்ஸ், பாலாஜி ஆகியோர் மது குடிப்பதற்காக அழைத்து சென்றனர். அப்போது அவர்கள் கஞ்சா விற்பனை செய்வதை வெளியில் சொன்னதால், ஆல்பர்ட்டை கத்தியால் வெட்டிவிட்டு 5 பேரும் தப்பி சென்றனர்.

இதில் படுகாயம் அடைந்த ஆல்பர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து மாருமணி உள்ளிட்ட 5 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அவர்கள் பதுங்கியுள்ள இடம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வில்லியனூர் எம்ஜிஆர் சிலை அருகே பதுங்கி இருந்த அய்யப்பன், சரண்ராஜ் ஆகியோரையும், கோபாலன் கடை பகுதியில் பதுங்கி இருந்த மாருமணி, அலெக்ஸ், பாலாஜி ஆகியோரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: