கடலூர், அக். 2:பவ்டா தொண்டு நிறுவனத்தின் 35வது ஆண்டு தொடக்கத்தையொட்டி 35 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் இன்று 2ம் தேதி தொடங்கப்படுகிறது. இதுகுறித்து இந்நிறுவனத்தின் நிறுவனர் ஜாஸ்லின் தம்பி கூறியதாவது:பவ்டா தொண்டு நிறுவனம் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் 6 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறது. இன்று 2ம் தேதி 35வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நிறுவனம், பவ்டா பசுமை பாதையை நோக்கி என்னும் திட்டத்தை தொடங்குகிறது.