இலுப்பூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

இலுப்பூர், அக்.2: இலுப்பூரில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இலுப்பூர் சமுதாய கூடத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் சின்னதம்பி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பரணீதரன், இலுப்பூர் ஆர்டிஓ டெய்சிகுமார், இலுப்பூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் குருபாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.  விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு தாய் வீட்டில் நடத்தப்படும் வளைகாப்பு விழா போல பெண்களுக்கு வளையல், சேலை, மஞ்சள், குங்குமம் போன்ற மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் அன்னவாசல் ஒன்றிய பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். கலவை சாதம் வழங்கப்பட்டது.

Related Stories: