தம்மம்பட்டி, அக்.1: தம்மம்பட்டி அருகே மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்த தனியார் பள்ளி ஆசிரியரை போலீசார் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தம்மம்பட்டி தனியார் பள்ளியில் முதுகலை ஆங்கில ஆசிரியராக இருப்பவர் மகேந்திரவர்மன்(55). மனைவி, மகன்களை பிரிந்து தனியாக வசித்து வரும், இவர் தம்மம்பட்டி உடையார்பாளையம் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு அவரது விசிட்டிங் கார்டுகளை மாடியிலிருந்து தூக்கி வீசிவிட்டு, மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக சத்தம் போட்டார். இதனையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு குவிந்தனர்.