விவசாயிகள் கோரிக்கை விராலிமலை தாலுகாவில் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்ப்பு பணி இன்று கடைசி

விராலிமலை, செப்.30: விராலிமலை தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்க்கும் பணி இன்றுடன் நிறைவு பெற உள்ளது.விராலிமலை தாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், தலைமை நில அளவையர், நில அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், உள்ளிட்ட அனைத்து வருவாய்த்துறை பணியாளர்கள் அனைவரும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையினை voter helpline, nvsp, 1950 ஆகியவை மூலம் சரிபார்க்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே, விராலிமலை சட்டமன்ற தொகுதிகுட்பட்ட தாலுகாவில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை ( EPIC), மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றின் புகைப்பட பிரதியை பெற்று தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல்1 துணை தாசில்தாரிடம் இன்று 30ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். மேலும் தாங்களாகவும் பதிவேற்றம் செய்து சரிபார்க்கலாம் என விராலிமலை தாசில்தார் சதீஸ்சரவணகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.

Related Stories: