கரூர், செப். 30: கரூர் மதுரை பைபாஸ் சாலை பெரியார் வளைவு அருகே அடிக்கடி நடைபெற்று வரும் விபத்தினை தடுக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மதுரை பைபாஸ் சாலை பெரியார் வளைவு அருகே சின்னாண்டாங்கோயில் மற்றும் பெரியாண்டாங்கோயில் பகுதிகளுக்கு செல்வதற்கான சாலை பிரிகிறது.இந்த இரண்டு பகுதிகளில் இருந்தும் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளை சேர்ந்த வாகன ஓட்டிகள் மதுரை கரூர் பைபாஸ் சாலையை தாண்டித்தான் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.அவ்வப்போது வாகன குறுக்கீடு காரணமாக சின்ன சின்ன விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. எனவே, விபத்தினை தடுக்கும் வகையிலும், எளிதாக போக்குவரத்து நடைபெறும் வகையிலும் உயர்மட்ட பாலம் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் இந்த பகுதியில் மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.