ராஜபாளையம். செப். 30: ராஜபாளையத்தில் நடைபெற்ற இலவச தடுப்பூசி முகாமில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.
உலக வெறிநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது. வெறிநோய் தாக்கப்பட்ட நாய் கடிப்பதால், ரேபிஸ் எனப்படும் நுண் கிருமியால் மனிதர்களுக்கு உடல் நலக் கோளாறு ஏற்படும். இந்த உடல் உபாதையானது 4 மாதத்தில் இருந்து அதிகபட்சம் 20 வருடங்கள் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த நோயை முற்றிலும் அழிக்கும் நோக்கில், செப்டம்பர் 28ம் தேதி உலக வெறிநோய் தடுப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ரேபிஸ் நோய் பரவாமல் தடுக்கவும் இந்த தினத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.