கோவை, செப்.26:கோவை தேயிலை வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் இலை ரக தேயிலை விலை கிலோவுக்கு 54 காசுகள் குறைந்தது கோவையில் உள்ள தேயிலை வர்த்தக மையத்தில் வாரந்தோறும் தேயிலை ஏலம் நடைபெறுகிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏலதாரர்கள் கலந்து கொண்டு ஆன்லைன் மூலம் தேயிலையை ஏலம் எடுத்து வருகின்றனர்.நேற்று நடந்த ஏலத்திற்கு 2 லட்சத்து 48 ஆயிரத்து 806 கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வந்தது. இதில் ஓ லட்சத்து 73 ஆயிரத்து 769 கிலோ ஏலம் போனது. விற்பனைக்கு வந்த தேயிலை தூளில் இருந்து மொத்தம் 70 சதவீதம் ஏலம் போனது. இதில் 45 ஏலதாரர்கள் கலந்து கொண்டனர். ஒரு கிலோ தேயிலை தூள் 95.16 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ 95 ரூபாய் அதன்படி கிலோவுக்கு 16 காசுகள் விலை அதிகரித்துள்ளது.