கெங்கவல்லி, செப்.26: தலைவாசல் ஒன்றியம், இலுப்பத்தம் ஊராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 2 ஏக்கர் ஏரி நிலத்தை, தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று பொக்லைன் மூலம் அகற்றினர். தலைவாசல் ஊராட்சி ஒன்றியம் உட்பட்ட இலுப்பநத்தம் ஊராட்சியில் வசிக்கும் பழனிசாமி, மதுரை, பிச்சைப்பிள்ளை, செல்வகுமார், மணிவேல் மற்றொரு பழனிசாமி ராஜ், முனியன் ஆகிய 8 பேர், கிராமத்தில் உள்ள ஏரி நிலம் 2 ஏக்கரை ஆக்கிரமித்து, கடந்த சில ஆண்டுகளாக கரும்பு, மக்காச்சோளம், மரவள்ளிகிழங்கு ஆகியவற்றை பயிரிட்டு வந்தனர். பொதுமக்களின் புகாரை அடுத்து, தலைவாசல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், கடந்த 2016ம் ஆண்டு இலுப்பந்தம் ஊராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க கோரி, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.