புதுச்சேரி, செப். 26: கப்பல் விபத்தில் கால்களில் அடிபட்டு வேலைக்கு செல்ல முடியாத விரக்தியில் மீனவர் தற்கொலை செய்து கொண்டார்.புதுவை முத்தியால்பேட்டை வைத்திக்குப்பம் அய்யனார் கோயில் வீதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). மீனவர். திருமணம் ஆகாதவர். வெளிநாட்டு கப்பலில் மீன்பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார். சில நாட்களுக்கு முன்பு கப்பல் விபத்தில் சதீஷ்குமாருக்கு 2 கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு மூட்டுமாற்று ஆபரேசன் ெசய்து பிளேட் பொருத்தப்பட்டுள்ளது.