12ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை

புதுச்சேரி, செப். 26:   புதுவை பாக்கமுடையான்பேட் ஆனந்தாபுரம் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உண்டு. கணவர் 10 வருடங்களுக்கு முன்பே பிரிந்து சென்று விட்டதால், மகாலட்சுமி தனது தாய் கஸ்தூரியுடன் (67) வசித்து வருகிறார். மகாலட்சுமியின் மகள் சாருலதா (16) லாஸ்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய சாருலதா, யாரும் இல்லாத நேரம் பூஜை அறையில் திடீரென மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கினார்.

வெளியே சென்றிருந்த உறவினர்கள் வீட்டுக்கு திரும்பியதும் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சாருலதாவை உடனடியாக மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பாட்டி கஸ்தூரி அளித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: