மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை

பொன்னேரி, செப். 26: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் வல்லூர் அனல்மின் நிலைய குடியிருப்பு வளாகம் அருகே நேற்று நடந்தது.  முகாமிற்கு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் ரமேஷ் ராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கா.சுந்தரம் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் ஆகியோர் கலந்துகொண்டு இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பத்தை இளைஞர்களிடம் வழங்கி பேசினர்.

இக்கூட்டத்தில், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமாரன், மீஞ்சூர் கோதண்டம், ஒன்றிய நிர்வாகிகள் தன்சிங், வல்லூர் தமிழரசன், பாளையம் முனுசாமி, கஸ்தூரி தசரதன், சக்திவேல், கன்னிமுத்து, தமிழன்சா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழரசன், துணை அமைப்பாளர்கள் கணேஷ், கிரிதர், சூரியராஜ், சரண்ராஜ், மீஞ்சூர் கருணாகரன் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் இளைஞர் அணியினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வல்லூர் ஊராட்சி செயலாளர்கள் சேகர், ராமமூர்த்தி நன்றி கூறினர்

Related Stories: