இணையவழியில் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
கரூர், செப்.26: தீபாவளி பட்டாசு கடைகளுக்கு இணைய வழி விண்ணப்பம் அளிக்க வரும் 28ம்தேதி வரைகால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.தீபாவளி திருநாளன்று பட்டாசுகள் விற்பனை செய்ய பண்டிகைக்கு 30நாட்களுக்கு முன் தற்காலிக உரிமம் வழங்கிட விண்ணப்பங்களை இணைய வழியாகசமர்ப்பிக்க அரசாணை வெளியிட்டு வரும் தீபாவளிக்கு பட்டாசு விற்பனை செய்திடவிண்ணப்பங்கள் இணைய வழி மூலமாக ஆகஸ்டு 31ம்தேதி வரை பெறப்பட்டது. தற்போது பட்டாசு விற்பனை செய்திட, விண்ணப்பிக்க காலஅவகாசம் முடிந்துவிட்ட நிலையில், மாவட்டங்களில் இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் இப்புதிய நடைமுறை தங்களுக்கு மேற்கண்ட காலவரையறைக்குள் தெரியவில்லை என்றும், இணையவழி மூலம் விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.