விருதுநகர், செப். 25: விருதுநகர் நோபிள் பெண்கள் கல்லூரியில் மாணவியரின் ஆளுமை திறனை மேம்படுத்தும் வகையிலான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆளுமை மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் நாகர்கோவிலில் உள்ள பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் ரோட்டரி அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த மாவட்ட அளவிலான இளையோர் சேவை கருத்தரங்கம் நடைபெற்றது.