ராஜபாளையம், செப். 25: ராஜபாளையம் நகர் பகுதியில் தேவையற்ற மணல் மேடுகளால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் நகர் பகுதியில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெறும் வேளையில் சாலைகளில் தோண்டப்பட்ட குழிகள் அமைத்து வருகிற பணிகள் முடிந்த நிலையில் எஞ்சிய மணல்களை ஆங்காங்கே ஜேசிபி இயந்திரங்களைக்கொண்டு சாலையிலேயே குவிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் அதை அப்புறப்படுத்த நிலையில் பெரிதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பலமுறை விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு அமைப்புகள் சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைகளை வைத்து தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பணிகள் நடைபெற்றும் அதனை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.