ஊருக்குள் நுழைய ரவுடிக்கு தடை

நெட்டப்பாக்கம், செப். 25: புதுவை மாநிலம் நெட்டப்பாக்கம் போலீசார் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காமராஜர் நகர் இடைத்தேர்தல் மற்றும் கிராமப்புறங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, ஏரிப்பாக்கம் புது காலனி பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் முத்தழகன் (30) என்பவரை ஊருக்குள் நுழைய தடைவிதிக்க சப்-கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். இவர் மீது ஏற்கனவே அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சப்-இன்ஸ்பெக்டர் விபல்குமார் இந்தப்பரிந்துரையை செய்துள்ளார்.

Related Stories: