உத்திரமேரூர், செப். 25: உத்திரமேரூர் அடுத்த பொற்பந்தல் ஊராட்சி கிடங்கரை கிராமத்தில் 6 தெருக்கள் உள்ளன. இங்கு, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் பெரும்பாலானோர் விவசாய கூலிவேலை மட்டுமே செய்கின்றனர்.
இங்குள்ள தெரு விளக்குகள் இரவு நேரங்களில் சரிவர எரிவதில்லை. இரவு முழுவதும் கிராமமே இருளில் மூழ்கி கிடக்கிறது. இதையொட்டி, பல்வேறு பணிகளுக்காக வெளியே செல்பவர்கள், இரவு நேரத்தில் வீடு திரும்ப கடும் சிரமம் அடைகின்றனர்.