பர்கூர் வேளாங்கண்ணி சிபிஎஸ்இ பள்ளியில் தேர்வை கொண்டாடுவோம் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி, செப்.24: பர்கூர் வேளாங்கண்ணி சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் “தேர்வை கொண்டாடுவோம்” என்ற நிகழ்ச்சி 3 நாட்கள் நடந்தது. நிகழ்ச்சியை பள்ளி மேலாளர் கூத்தரசன் தலைமை வகித்து, துவக்கி வைத்தார். முதல்வர் மெரினா பலராமன், வேளாங்கண்ணி பள்ளிகளின் முதல்வர்கள் வேப்பனஹள்ளி அன்பழகன், ஓசூர் ராஜேந்திரன், தேன்கனிக்கோட்டை சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சேலம் அரசு வழக்கறிஞர் ரவிசங்கர் பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் தாமு பங்கேற்று பேசினார். அப்போது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் புத்தாக்க பயிற்சிகளை வழங்கினார். தேர்வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற வழிமுறைகளையும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என எடுத்து கூறி உற்சாகப்படுத்தினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: