தொண்டாமுத்தூர், செப்.20: கோவையில் இருந்து ஷீரடிக்கு நேரடி விமான சேவை துவங்க வேண்டும் என சாய் சேவா பரிவார் அமைப்பினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை பாப்பநாயக்கன்புதூரில் சாய் சேவா பரிவார் அமைப்பின் துவக்க விழா நிறுவனத் தலைவர் செந்தில் குமார் தலைமையில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் தர்மேந்திரா வரவேற்றார். விழாவில் முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் அமைப்பை துவக்கி வைத்தார். பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் அமைப்பின் கொடியை அறிமுகம் செய்து வைத்தனர். விழாவில் விபூதி சித்தர், வக்கீல் ரங்கராஜூ, மாநில தலைவர்பரமசிவம், மாநில மகளிர் அணியின் கவிதா, பொருளாளர் சம்பத் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.