திருப்பூர், செப். 19: திருப்பூர் மாவட்டத்தில் 9 இடங்களில் நாளை (20ம் ேததி) அம்மா திட்ட முகாம் நடக்கிறது. திருப்பூர் வடக்கு வேலம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், திருப்பூர் தெற்கு முதலிபாளையம் சமுதாய நல கூடம், அவிநாசி வடுகபாளையம் கிராம நிர்வாக அலுவலகம், ஊத்துக்குளி புத்தூர்பள்ளபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம், பல்லடம் சுக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம், தாராபுரம் புஞ்சைத்தலையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், காங்கயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், உடுமலைப்பேட்டை மோமவாரப்பட்டி கிராம நிர்வாக அலுவலகம், மடத்துக்குளம் சோழமாதேவி கிராம நிர்வாக அலுவலகம் ஆகிய 9 இடங்களில் அம்மா திட்ட முகாம் நாளை (20ம் தேதி) நடைபெற உள்ளது.