உடுமலை, செப். 19: ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தவும், விலங்குகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். உடுமலை அருகே ஒன்பதாறு செக்போஸ்டில் இருந்து மூணாறு செல்லும் சாலையில், உடுமலை வனச்சரக பகுதியில் ஏழுமலையான் கோயில் உள்ளது. தென்திருப்பதி என்றழைக்கப்படும் இந்த கோயில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. ஏழுமலையான் கோயில் பிரிவில் இறங்கி, சுமார் 5 கிமீ தூரம் நடந்து கோயிலுக்கு செல்ல வேண்டும். புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் இங்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. வழக்கமாக வாகனங்களில் வருபவர்களும், சிறப்பு பேருந்துகளில் வருபவர்களும் ஏழுமலையான் கோயில் பிரிவில் இறங்கி நடந்து செல்வார்கள். வாகனங்களை அங்கேயே பார்க்கிங் செய்வார்கள். இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி, இந்த முறை செக்போஸ்ட் பகுதியிலேயே இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்து செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். பேருந்துகளில் செல்பவர்கள் மட்டும் ஏழுமலையான் கோயில் பிரிவு வரை செல்லலாம்.