ராசிபுரம் அருகே பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீர் மாணவர்கள் அவதி

ராசிபுரம், செப்.19: ராசிபுரம் அருகே, பள்ளி வளாகத்தில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீரால் மாணவர்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் முனியப்பம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி, மிகவும் தாழ்வான பகுதியில் உள்ளதால், நேற்று முன்தினம் பெய்த கனமழையின் காரணமாக, பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் புகுந்து, தீவு போல காட்சியளிக்கிறது. மழைநீரை கடந்து தான் குழந்தைகள் பள்ளிக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மழை பெய்தால், பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை கல்வித்துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: