க.பரமத்தி,செப்.19: கடந்த நான்கு வாரங்களாகவே முதல் ரக தேங்காய் விலை ஒரு கிலோ ரூ.26 அதிகமாகவோ அல்லது குறையவோ இல்லை என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.இரு வெவ்வேறு ஒன்றிய பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுத்தது போக மீதம் உள்ள பருப்பினையும், தேங்காய்களையும் அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் தோறும் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு தேங்காய்களுக்காக நடந்த ஏலத்தில் சுமார் 4263 கிலோ எடையுள்ள 12462 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இதில் ஒரு கிலோ தேங்காய்கள் விலை குறைந்த விலையாக ரூ.22, ஒரு கிலோ தேங்காய் அதிக விலையாக ரூ.26, ஏலம் விடப்பட்டது.