நெல்லை, செப். 15: தமிழ்நாடு எம்ஆர்பி நர்சுகள் மேம்பாட்டு சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நெல்லையில் நடந்தது. நெல்லை சந்திப்பில் உள்ள வருவாய்த் துறை அலுவலர் சங்கக் கட்டிடத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சரஸ்வதி தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் தேவி அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் எம்ஆர்பி நர்சுகளுக்கும் பிற நர்சுகளுக்கு வழங்கும் ஊதியத்தை வழங்க வேண்டும். அனைத்து நர்சுகளுக்கும் ஒரே சீருடை என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.