நெல்லை, செப். 15: பாளை சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் கல்வி சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.நெல்லை மாவட்ட மழலையர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி நலச்சங்கம் சார்பில் பாளை சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியி ஆசிரியர் தின விழா நடந்தது. தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் ராபின்சன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அதிமுக மகளிர் அணி மாநில செயலாளர் விஜிலா சத்யானந்த், 10 ஆண்டுகளுக்கு மேல் நர்சரி பள்ளிகளில் தொடர்ந்து பணியாற்றிய 140 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் விருதுகள் வழங்கிப் பாராட்டினார்.