தஞ்சை, செப். 15: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தஞ்சையில் நடந்த யாதவ மகாசபை மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தஞ்சையில் தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில பொதுக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. பாண்டியன், மாநில துணை பொதுச் செயலாளர் அடைக்கலம் யாதவ், பொருளாளர் எத்திராஜ், மாநில துணை தலைவர் பழநியாதவ், மாநில செயலாளர் ஹரிகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் கண்ணன், மாவட்ட தலைவர் சீனிவாசன், மாநில இளைஞரணி செயலாளர் வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.