திருப்பூர், செப்.15: திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் கிராமங்களுக்கு சென்று அங்கு உள்ள மனவளர்ச்சி குன்றிய, முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தசைபயிற்சி, உதவி உபகரணங்கள் வழங்குதல், திட்டங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவை செயல்படுத்த நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்திக்கு உதவியாளர் (தொகுப்பூதிய அடிப்படையில்) பணி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.