உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூர், செப்.15: திருப்பூர் மாவட்டத்தில்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் கிராமங்களுக்கு சென்று அங்கு உள்ள மனவளர்ச்சி குன்றிய, முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தசைபயிற்சி, உதவி உபகரணங்கள் வழங்குதல், திட்டங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவை செயல்படுத்த நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்திக்கு உதவியாளர்  (தொகுப்பூதிய அடிப்படையில்) பணி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

மனுதாரர் இன சுழற்சி முறையில் பொதுப்போட்டி (முன்னுரிமை பெற்றவர்) வயது 18க்கு மேல் 35க்குள் இருக்க வேண்டும், கல்வி தகுதி 8ம் வகுப்பு தோல்வி,  தகுதியும் விருப்பமும், உள்ள நபர்கள் வரும் 30ம் தேதிக்குள் மாவட்ட கலெக்டர், அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள  தரை தளத்தில் அறை எண் 22ல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், திருப்பூர் அவர்களிடத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, விண்ணப்பிக்கலாம்.

Related Stories: