திருப்பூர், செப் 11: திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் நடைபெறும் மாட்டுசந்தை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் தெற்குப்பகுதியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மதியம் 2 மணி முதல் 4 மணி வரை மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகள் தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில், நத்தக்காடையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து காளைகள், கறவை மாடுகள், எருமை ஆகியவை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இவற்றை பொள்ளாச்சி கோவை மற்றும் கேரள வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள்.