மஞ்சூர், செப்.11: தேயிலை தோட்டங்களில் இலை பறிக்கும் இயந்திரத்தை 100 சதவீதம் மானியத்தில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மஞ்சூர், பிக்கட்டி, எடக்காடு, கிண்ணக்கொரை உள்ளிட்ட குந்தா பகுதியில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. சுமார் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் தேயிலை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் தேயிலை விவசாயத்தில் நிலவிவரும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு புறம் இருக்க கடந்த சில ஆண்டுகளாக தேயிலை தோட்டங்களில் பணிபுரிய தொழிலாளர்கள் பற்றாகுறையும் கடுமையாக உள்ளது. சரிவர வேலை வாய்ப்பின்மை, பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பாலான தொழிலாளர்களும் மாற்று வேலை வாய்ப்புகளை தேடி சமவெளி பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்வதால் தேயிலை தோட்டங்களில் தொழிலாளர் பற்றாகுறை ஏற்படுகிறது.