சிவகங்கை, செப். 10: சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ததை கண்டித்து அனைத்துக்கட்சிகள் பங்கு பெற்ற கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு காங்கிரஸ் மாவட்டத்தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். காங்கிரஸ் சட்டமன்றக்குழுத்தலைவர் ராமசாமி, காங்கிரஸ் அகில இந்திய பொது செயலாளர் சஞ்சய்தத், திமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் எம்எல்ஏ, மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், திருச்சி வேலுச்சாமி, மகளிர் காங்கிரஸ் மாநில தலைவி ஜான்சிராணி ஆகியோர் மத்திய அரசை கண்டித்து பேசினர்.